குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்கலைஞர் உரை:
உழந்தும் உழவே தலை.
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.குறள் 1032:
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுகலைஞர் உரை:
எழுவாரை எல்லாம் பொறுத்து.
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்கலைஞர் உரை:
தொழுதுண்டு பின்செல் பவர்.
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.குறள் 1034:
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்கலைஞர் உரை:
அலகுடை நீழ லவர்.
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.குறள் 1035:
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுகலைஞர் உரை:
கைசெய்தூண் மாலை யவர்.
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.குறள் 1036:
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்கலைஞர் உரை:
விட்டேம்என் பார்க்கும் நிலை.
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.குறள் 1037:
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்கலைஞர் உரை:
வேண்டாது சாலப் படும்.
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.குறள் 1038:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்கலைஞர் உரை:
நீரினும் நன்றதன் காப்பு.
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.குறள் 1039:
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துகலைஞர் உரை:
இல்லாளின் ஊடி விடும்.
உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.குறள் 1040:
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்கலைஞர் உரை:
நிலமென்னும் நல்லாள் நகும்.
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.
No comments:
Post a Comment