குறள் 971:
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்குகலைஞர் உரை:
அஃதிறந்து வாழ்தும் எனல்.
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.குறள் 972:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாகலைஞர் உரை:
செய்தொழில் வேற்றுமை யான்.
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.குறள் 973:
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்கலைஞர் உரை:
கீழல்லார் கீழல் லவர்.
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈ.டுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.குறள் 974:
ஒருமை மகளிரே போலப் பெருமையும்கலைஞர் உரை:
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.குறள் 975:
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்கலைஞர் உரை:
அருமை உடைய செயல்.
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.குறள் 976:
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்கலைஞர் உரை:
பேணிக் கொள் வேம் என்னும்
நோக்கு.
பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.குறள் 977:
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்கலைஞர் உரை:
சீரல் லவர்கண் படின்.
சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.குறள் 978:
பணியுமாம் என்றும் பெருமை சிறுமைகலைஞர் உரை:
அணியுமாம் தன்னை வியந்து.
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.குறள் 979:
பெருமை பெருமிதம் இன்மை சிறுமைகலைஞர் உரை:
பெருமிதம் ஊர்ந்து விடல்.
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.குறள் 980:
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்கலைஞர் உரை:
குற்றமே கூறி விடும்.
பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.
நன்று, மிக்க நன்று, உலகில் உள்ள தமிழ் கற்றோர் அனைவரும் குறள் கற்றுப் பயன் பெற , நன்று செய்தீர், நன்றி, வாழ்க தமிழ், வளர்க குறளோவியம்🙏
ReplyDelete