குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்கலைஞர் உரை:
செத்தான் செயக்கிடந்தது இல்.
அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?.குறள் 1002:
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்கலைஞர் உரை:
மருளானாம் மாணாப் பிறப்பு.
யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.குறள் 1003:
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்கலைஞர் உரை:
தோற்றம் நிலக்குப் பொறை.
புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.குறள் 1004:
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்கலைஞர் உரை:
நச்சப் படாஅ தவன்.
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.குறள் 1005:
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகலைஞர் உரை:
கோடியுண் டாயினும் இல்.
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.குறள் 1006:
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றுகலைஞர் உரை:
ஈதல் இயல்பிலா தான்.
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.குறள் 1007:
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்கலைஞர் உரை:
பெற்றாள் தமியள்மூத் தற்று.
வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது.குறள் 1008:
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்கலைஞர் உரை:
நச்சு மரம்பழுத் தற்று.
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!.குறள் 1009:
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டியகலைஞர் உரை:
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.குறள் 1010:
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிகலைஞர் உரை:
வறங்கூர்ந் தனையது உடைத்து.
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.
No comments:
Post a Comment