குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்கலைஞர் உரை:
குன்ற வருப விடல்.
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.குறள் 962:
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுகலைஞர் உரை:
பேராண்மை வேண்டு பவர்.
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈ.டுபடமாட்டார்.குறள் 963:
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியகலைஞர் உரை:
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.குறள் 964:
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்கலைஞர் உரை:
நிலையின் இழிந்தக் கடை.
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.குறள் 965:
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகலைஞர் உரை:
குன்றி அனைய செயின்.
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.குறள் 966:
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்றுகலைஞர் உரை:
இகழ்வார்பின் சென்று நிலை.
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?.குறள் 967:
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகலைஞர் உரை:
கெட்டான் எனப்படுதல் நன்று.
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.குறள் 968:
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமைகலைஞர் உரை:
பீடழிய வந்த இடத்து.
சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.குறள் 969:
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்கலைஞர் உரை:
உயிர்நீப்பர் மானம் வரின்.
உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.குறள் 970:
இளிவரின் வாழாத மானம் உடையார்கலைஞர் உரை:
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.
No comments:
Post a Comment